தேர்தலில் நிற்க முடிவு செய்த பாக்கியா.. ராதிகாவை போட்டியாக நிற்க வைக்கும் கோபி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தேர்தலில் நிற்காமல் இருப்பதால் அதை கோபி நக்கல் அடித்து சிரிக்கிறார். உடனே பாக்கியா நான் தேர்தலில் நிற்கிறேன் என முடிவு செய்கிறார். ஆனால் அது ஈஸ்வரிக்கு பிடிக்காமல் இருக்கிறது. பின் பாக்கியாவிற்கு எதிராக நிற்க கோபி ஒரு முடிவு ஒன்றை எடுக்கிறார்.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தேர்தலில் நிற்கமாட்டேன் என சொல்ல, உடனே பழைய செகரட்டரி அவரை நக்கலடித்து பேசுகிறார். அவங்களுக்கு என்ன தெரியும் என்பது போல கோபியும் பாக்கியாவை உதாசீனப்படுத்தி பேசுகிறார். பின் பழைய செகரட்டரியின் மனைவியை வெற்றியாளராக அறிவித்து விடலாம் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியாவிற்கு கோவம் வந்து செல்வி கையை பிடித்து நான் நிற்கிறேன் என சொல்கிறார். செல்வி அதை கேட்டு சத்தமாக என் அக்கா தேர்தலில் நிற்பதாக சொல்கிறார். உடனே அந்த பழைய செகரட்டரி உங்க அக்கா மீண்டும் வீட்டிற்கு சென்று மாற்றி சொல்ல போகிறார் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் செல்வி எங்க ஓட்டு எல்லாம் எங்க அக்காவிற்கு தான் என சொல்லி பாக்கியா அக்கா வாழ்க என சொல்கிறார். பின் பாக்கியா தேர்தல் தேதியை சொல்ல சொல்ல, அவரும் தேதியை சொல்கிறார். ராமமூர்த்தி என் மருமகளுக்கு ஆதரவை கொடுங்கள் என சொல்கிறார். பின் அனைவரும் பாக்கியாவின் முடிவை கை தட்டி ஏற்றுக் கொள்கிறார். பின் பாக்கியா ராமமூர்த்தியிடம் எதாவது தவறு செய்கிறேனா என கேட்க இல்லை என சொல்கிறார். பின் செல்வி வருங்கால செகரட்டரி வாழ்க என சொல்ல, கோபி பாக்கியாவை பார்த்து கோபப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்து செல்வி எல்லாரிடமும் விவரத்தை சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.
பின் எழில் அந்த ஆள் இருக்கும் போது எதுவும் செய்ய முடியவில்லை. இப்போதும் அம்மா விருப்பத்திற்கு எதுவும் செய்ய கூடாதா என கேட்கிறார். அதன் பின் ராமமூர்த்தி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கம் கோபி இனியாவிடம் செகரட்டரி தேர்தலில் உன் அம்மா தான் நிற்க போவதாக சொல்லி நக்கல் அடித்து சிரிக்கிறார். அப்போது ராமமூர்த்தி என் மருமகளை ஏன் பேசுகிறாய் அவள் கண்டிப்பாக வெற்றி பெறுவாள் என சொல்கிறார். உடனே ராமமூர்த்தி கோவப்பட்டு உனக்கு முடிந்தால் நீ தேர்தலில் நின்று வெற்றி பெறு என சவால் விடுகிறார்.
தமிழகத்தில் இன்று (டிச. 9) 29 மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு!
அதை கேட்டு கோபி சிரிக்க, ராதிகா நமக்கு எதற்கு அதெல்லாம் என சொல்கிறார். பின் உனக்கு பொறாமை இருந்தால் நீ நில்லு என சொல்ல, பெண்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும். அதனால் தான் நான் நிற்கவில்லை. இல்லை என்றால் நான் தேர்தலில் வெற்றி பெற்று கண்டிப்பாக ஜெயிப்பேன் என சொல்கிறார். பின் நான் நிற்க முடியவில்லை என்றால் என்ன என் மனைவி ராதிகா நிற்பாள் என சொல்ல, ராதிகா என்னால் முடியாது என சொல்கிறார். ஆனால் கோபி கண்டிப்பாக நிற்க வேண்டும் என சொல்கிறார். பின் ரூமிற்குள் வந்து ராதிகா நிற்கமாட்டேன் என சண்டை போடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.