தமிழகத்தில் ‘இந்த’ பள்ளி கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் – தொடங்கிய முதல்வர்!!
இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
காலை சிற்றுண்டி
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழகத்தில் செயல்படும் மாநகராட்சி/நகராட்சி/கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக தற்போது இந்து சமய அறநிலைத்துறை சார்பாக இயங்கி வரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகளிலும் மற்றும் 4 கல்லூரிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் 48,187 காய்ச்சல் முகாம்கள் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இதன் மூலமாக 4,000 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். இத்திட்டம் 3.79 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் படிப்படியாக இந்து சமய அறநிலைத்துறை சார்பாக செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.