தமிழகத்தில் 48,187 காய்ச்சல் முகாம்கள் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்கள் காய்ச்சல். இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் அரசு சார்பாக மக்களுக்கு சிகிச்சைக்கு அளிக்க காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல் முகாம்:
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் மழை காலம் என்பதால் இந்த நேரத்தில் அதிகம் நோய்களும் பரவி வருகிறது. கடந்த மாதங்களில் பெய்த மழையால் இன்புளுயன்சா காய்ச்சல் பரவியது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் டெங்கு காய்ச்சல் அச்சமும் நிலவியது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து தொற்றுநோய் பரவலுக்கு வழி வகுத்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களே இதனை செய்யாதீங்க – மீறினால் நடவடிக்கை.. டி.ஜி.பி முக்கிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
மொத்தமாக 48,187 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 3,562 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாயிலாக சென்னையில் மட்டும் 76 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டெங்கு பரவும் அபாயம் இருப்பதால் சென்னையில் கொசுவை ஒழிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.