இளைஞர்களை தேடும் Foxconn இந்தியா நிறுவனம்.. 53,000 பேருக்கு வேலை – உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டம்!
ஐபோன்களை தயாரிக்கும் Foxconn நிறுவனம் தனது நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்திய தொழிற்சாலையில் புதிதாக பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Foxconn திட்டம்:
Foxconn நிறுவனம் ஐபோன் தயாரிப்பு மற்றும் விற்பனை சந்தையில் முன்னிலையில் உள்ள ஒரு நிறுவனம். தைவானை சேர்ந்த இந்த நிறுவனத்தின் முக்கிய ஆலை சீனாவில் உள்ளது. சீனாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் பழையபடி அதிகரித்து வருகிறது. புதிய தொற்று மாறுபாடுகள் உறுதி செய்யப்பட்டு வருவதால், சீனாவில் 0% கோவிட் கொள்கை அமலில் இருந்து வருகிறது. இதனால் அங்கு Foxconn நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் ‘இந்த’ பள்ளி கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் – தொடங்கிய முதல்வர்!!
இதனால், வணிக சந்தையில் பின்னடைவை Foxconn நிறுவனம் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனை தடுக்க இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள Foxconn ஆலையில் புதிதாக 53,000ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் தமிழக ஆலையில் 70,000 ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட 300% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.