தமிழகத்தில் இன்று முதல் “இந்த” இடங்களில் ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல ரயில் சேவைகள் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சீரமைப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து
தமிழகத்தில் பொதுபோக்குவரத்தில் ரயில் போக்குவரத்து மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ள பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து உகந்ததாக உள்ளது. மேலும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மதுரை, ராஜபாளையம் – சங்கரன்கோவில் இடையே இருக்கும் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நிறுத்தப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் இந்த சிறப்பு ரயில் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹில்கிரோ ஆடர்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக கோவையில் இன்று ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்