விரைவில் கோபி-ராதிகாவுக்கு டும் டும் டும் – அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!

0
விரைவில் கோபி-ராதிகாவுக்கு டும் டும் டும் - அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!
விரைவில் கோபி-ராதிகாவுக்கு டும் டும் டும் - அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!
விரைவில் கோபி-ராதிகாவுக்கு டும் டும் டும் – அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்!

கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கோபி, ராதிகா திருமணம் விரைவில் நடக்க இருப்பது போல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதற்கு காரணமே எல்லாரோட வீட்டில் நடுக்குற எதார்த்தமான நிகழ்வுகளை மக்கள் மனசுல பதிகிற மாதிரி கதை அமைஞ்சிருக்கு. கடந்த சில எபிசோடுகளில் பாக்கியா கோபியை ஒரு வழியா சண்டை போட்டு வெளியே அனுப்புறாங்க. இதுக்கு அப்புறம் கோபி ஒரு வழியா பாக்கியாகிட்ட இருந்து விடுதலை கிடைச்சிருச்சு அப்படிங்கிற மாதிரி சந்தோஷமா வெளியே போறாரு. இந்த நிலையில் கோபி இல்லாமல் தனி ஆளா குடும்பத்தை நடத்த பாக்கியா ரொம்பவே சிரமப்படுறாங்க. உடனே ஈஸ்வரி அம்மா இதுக்கு தான் நான் அவ்வளவு சொன்னேன் கேட்டியா அப்படின்னு அவங்க சார்பாக பாக்கியா திட்டிட்டு போறாங்க. இதுக்கு இடையில் வீட்டுல இருக்க எல்லாரும் பாக்கியாவுக்கு எதிராக தான் பேசிட்டு இருக்காங்க.

இன்னொரு பக்கம் கோபி, ராதிகாவை ஒண்ணா பார்க்கும் பாக்கியா, கோபத்தில் ரெண்டு பேரையும் திட்டிட்டு போறாங்க. இத கேட்ட ராதிகா நாம என்ன தப்பு பண்ணினோம், பாக்கியா நம்மள இப்படி திட்டிட்டு போறாங்கன்னு பாக்கியா மேல கோபப்படுகிறாங்க. உடனே இப்படி நம்மள புரிஞ்சுக்காம எல்லாரும் தப்பா பேசுறாங்க நாம ஏன் கோபியை கல்யாணம் பண்றத பத்தி யோசிக்க கூடாதுனு நினைக்கிறாங்க. இன்னொரு பக்கம் ராதிகாவோட அம்மா கோபியை வீட்டுக்கு கூப்பிட்டு கல்யாணம் விஷயம் பத்தி பேசுறாங்க. இத கேட்ட ராதிகா முதல்ல கோபப்பட்டாலும் அதுக்கு அப்புறம் அவங்க அம்மாஒரு வழியா சமாதானம் பன்னிருறாங்க.

மாணவர்களின் வாழ்க்கையை செதுக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் – முக்கிய தலைவர்கள் வாழ்த்து!

இதுக்கு அப்புறம் கோபி கல்யாணத்துக்கு பாக்கியா கூப்பிடுற மாதிரி கதை வர இருக்கிறது. இன்னொரு பக்கம் ராதிகாவோட முதல் கணவர் ராஜேஷ் இந்த கல்யாணத்தில் பிரச்சனை பண்ணுவாரு அப்படிங்கிற மாதிரியும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோபி அவங்க அம்மா ஈஸ்வரிகிட்ட ராதிகாவை கல்யாணம் பண்ண சம்மதம் கேட்க போறாரு. இத கேட்ட அவங்க அம்மாவும் சம்மதம் சொல்ற மாதிரி பாக்கலாம் னு சொல்ராங்க. இதெல்லாம் பாக்கும் போது ஒரு வழியா கோபி-ராதிகா கல்யாணம் சீக்கிரமே நடக்க போகுது என்றும் வர எபிசோடுகளில் ரசிகர்களுக்கு எதிர்பாராத டிவிஸ்ட் அதிகம் இருக்கும்னு சீரியல் வட்டாரம் கருத்து தெரிவிச்சிருக்காங்க.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!