தமிழகத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கு விடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை:
கேரளா மாநிலத்தில் மட்டுமல்லாமல் தென் தமிழகத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் மிகச்சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, ஓணம் பண்டிகைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளா மாநிலம் முழுவதுமே பண்டிகை ஏற்பாடுகள் களைகட்டி கொண்டிருக்கிறது. மேலும், கேரளா மாநிலத்தில் குறைந்தது 5 நாட்கள் வரைக்கும் ஓணம் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் “இந்த” இடங்களில் ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்