ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றும் ராதிகா, கோவப்படும் பாக்கியா – திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

2
ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றும் ராதிகா, கோவப்படும் பாக்கியா - திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றும் ராதிகா, கோவப்படும் பாக்கியா - திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றும் ராதிகா, கோவப்படும் பாக்கியா – திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

கோபி வீட்டை விட்டு வெளியேற்றியதும் நேராக ராதிகாவின் வீட்டிற்கு தான் வருவார் என நினைத்து ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது, ஈஸ்வரியை ராதிகா கண்டபடி திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி வீட்டை விட்டு வந்து எங்கு செல்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அதாவது, கோபிக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டதும், பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே கிளம்புமாறு கோபி கூறுகிறார். உடனே, பாக்கியா நான் எதற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. நீங்கள் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என கோபியிடம் கூறுகிறார்.

பின்னர், கோபி இந்த வீட்டிற்காக நான் நிறைய செலவு செய்திருக்கிறேன். இதனால், இந்த வீட்டிற்காக நான் செலவு செய்த மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும் என கோபி கேட்க பாக்கியாவும் 40 லட்சம் தருகிறேன் என ஒப்புக்கொள்கிறார். பின்னர், கோபி ராதிகாவை சந்திக்க ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். கோபியை வீட்டை விட்டு துரத்திய அனைத்து விஷயங்களையும் கோபி ராதிகாவிடம் கூறுகிறார். அப்பொழுது கூட ராதிகா கோபியை ஏற்றுக்கொள்ளவில்லை. ராதிகாவின் அண்ணன், அம்மா என அனைவரும் கோபியை ஏற்றுக்கொள்ளும்படி கூறியும் ராதிகா கோபியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, நடமாடும் கால்நடை மையம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

பின்னர், ஈஸ்வரி பாக்கியாவிடம் உன்னால் தான் கோபி வீட்டை விட்டு சென்றுவிட்டான். தற்போது நேராக ராதிகாவை தான் சந்திக்க சென்றிருப்பார் என கூறுகிறார். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என ஈஸ்வரி நேராக ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவிடம் கோபியை எங்கே ஒழித்து வைத்திருக்கிறீர்கள். கோபியை வெளியே வர சொல்லுங்கள் என கத்துகிறார். கோபி இங்கு இல்லை. அவர் வீட்டிற்கு வந்தபோதே அவரை திருப்பி அனுப்பிவிட்டோம் என ராதிகா கூறுகிறார். பின்னர், ஈஸ்வரி எங்கள் குடும்பம் உன்னால் தான் பிரிந்து கிடக்கிறது. சத்தியமாக நீங்கள் நல்லாவே இருக்க மாட்டிர்கள் என ராதிகாவிடம் கூறுகிறார். உடனே, ராதிகா கோபத்துடன் நிறுத்துங்கள் தயவு செய்து வீட்டை விட்டு செல்லுங்கள் என ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. பாக்யாவை நன்கு புரிந்துகொண்ட ராமமூர்த்தியே பாக்யாவை திருமணம் செய்துகொண்டு இந்த சீரியலை முடித்து வைக்கலாம்…

  2. பாக்யாவை நன்கு புரிந்துகொண்ட ராமமூர்த்தியே பாக்யாவை திருமணம் செய்துகொண்டு இந்த சீரியலையும் முடித்து வைக்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!