இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, நடமாடும் கால்நடை மையம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் 2022-2023 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 மும், நடமாடும் கால்நடை மையங்களும் அமைக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு:
நாட்டில் தற்போது பொருளாதார நிலை முன்னேறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் நிதி நிலைமை மிகவும் நலிவடைந்து காணப்பட்டது. அதாவது கொரோனா காலத்தில் கொண்டுவரப்பட்ட சில நடவடிக்கைகளால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட்டியது. இந்த நிலையில் நாட்டில் வேலைவாய்ப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல நல உதவித் திட்டங்களை செய்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தின் 2022-2023 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரி மாநிலத்தின் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தொகை ரூ. 10,696 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு 1,729 கோடி வழங்கியுள்ளது. இவற்றில் மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாய், மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வெளியில் கடன் திரட்ட 1,889 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
Wipro நிறுவன ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – 15% வரைக்கும் சம்பள உயர்வு அறிவிப்பு!
மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலில் மக்களுக்கு பயன்படக்கூடிய சில நலத்திட்டங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
1. சென்னை- புதுச்சேரிக்கு இடையிலான கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2. இலவச பாட புத்தகங்கள், சீருடை, மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
3. காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ரூ.80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும்.
4. காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.
5. மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும்.
6. பாரதியார் பல்கலை கூடத்தில் ரூ.16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும்.
7. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
8. 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்