தமிழகத்தில் ரயில் நிலையங்களில் புதிய சேவைகள் – உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதாக அடையாளம் காண இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட பேருந்துகளை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு சேவையையும் தொடங்கி வைத்துள்ளார்.
சிற்றுந்து சேவை
தமிழகத்தில் திமுக தனது வாக்குறுதியில் கூறியனவற்றை தான் ஆட்சி அமைத்ததும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாக தங்களின் மாவட்டத்திற்குள் பயணம் மேற்கொள்ளலாம் என்ற மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயற்படுத்தி உள்ளது. இத்திட்டம் மகளிர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பேருந்துகளை மக்கள் அடையாளம் காண சிரமப்பட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதனால் இதனை சுலபமாக அடையாளம் காண மகளிர் கட்டணமில்லா பேருந்தின் முகப்பு பக்கம் மற்றும் பின்புறம் என இரு புறத்திலும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள நகரப் பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டு இதனை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனால் மகளிர் கட்டணமில்லா பேருந்தை மகளிர் சுலபமாக அடையாளம் கண்டு பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தை தொடர்ந்து மேலும் ஒரு திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 12வது தவணை பணத்திற்கான அறிவிப்பு
அதாவது, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 10 இணைப்பு சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை பேருந்து நிலையங்களில் இருந்து முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செனாய் நகர், மெட்ரோ- தியாகராய நகர், சின்னமலை மெட்ரோ- தரமணி, விமான நிலைய மெட்ரோ- தாம்பரம் மேற்கு, கிண்டி மெட்ரோ- வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு இந்த சிற்றுந்து சேவையை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.