தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.08) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட ஆவியூரில் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி (திங்கள் கிழமை) மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்விநியோகம் தடைபடும் பகுதிகளின் விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் ஒரு சில இடங்களில் மின்சார விபத்துகளை தடுக்க மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாள் அன்று எந்தெந்த பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்பது குறித்த விவரத்தையும் மின்சார வாரியம் வெளியிடும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட ஆவியூரில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின் விநியோகம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சனிக்கிழமை இருக்காது என அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
வங்கிகளுக்கு அடுத்த 6 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு
அதில் ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் பெறும் ஆவியூர், காரியாப்பட்டி, புல்வாய்க்கரை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது. எனவே பொதுமக்கள் அதற்கான ஏற்பாடுகளை ,முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.