விரைவில் முடிவுக்கு வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல எபிசோடுகளுக்கு பின் உண்மை ஒன்று வெளியாகி இருக்கிறது. லக்ஷ்மியும் ஹேமாவும் கண்ணம்மாவின் குழந்தைகள் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வந்துள்ளது. அதனால் சீரியல் முடிய இருப்பதாக செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் முதலில் நம்பர் ஓன் சீரியலாக இருந்து வந்த நிலையில் சில எபிசோடுகளாக எந்த திருப்பமும் காட்டப்படாமல் இருந்தது. ஒரே கதையை திரும்ப திரும்ப காட்டப்பட்டதால் சீரியலின் TRP பெரிய சரிவை கண்டது. அந்த வகையில் கதையில் பல புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு கதைக்களம் வேறு வகையில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதிலும் சுவாரசியம் குறைவாக இருந்த நிலையில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல் மகா சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதில் முழுக்க முழுக்க ராஜா ராணி 2 கதையை மையமாக வைத்து காட்டப்பட்ட நிலையில், மகா சங்கமம் முடிவில் பெரிய திருப்பம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ஹேமா மற்றும் லட்சுமி பிறந்தநாளில் பாரதியின் பழைய காதலி புகைப்படத்தை காட்டி ஹேமா இது தான் உன்னுடைய அம்மா என பாரதி சொல்ல அதனால் கோவப்பட்ட கண்ணம்மா உண்மையை வெளியே சொல்கிறார். ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் நான் சுமந்து பெற்ற குழந்தைகள் என எல்லா உண்மையும் சொல்கிறார்.
கோபியை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் செழியன், அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்
பதிலுக்கு துளசி சாட்சி சொல்ல, சௌந்தர்யாவும் ஆமாம் என உண்மையை சொல்கிறார். அதை கேட்டு பாரதி மனம் வருத்தப்படுகிறார். உண்மை வெளியாகிவிட்டதால் பாரதிக்கு சந்தேகம் வந்து உண்மை எல்லாம் தெரிந்துவிடுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும் செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இது குறித்து சீரியல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் சீரியலில் இன்னும் DNA டெஸ்ட் எடுக்கவில்லை என்பதால் இப்போதைக்கு சீரியல் முடிய வாய்ப்பில்லை என தெளிவாக தெரிகிறது.