கோபியை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் செழியன், அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுக்க வேண்டாம் என குடும்பத்தினர்கள் அனைவரும் கேட்டுக்கொண்ட நிலையிலும் கூட கோபி விவாகரத்து கொடுத்துவிட்டார். இதனால், கடுப்பாகி செழியன் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி விருப்பப்பட்ட அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என பாக்கியா நினைக்கிறார். அதாவது, இத்தனை நாட்கள் கோபிக்கு பிடிக்காத மனைவியாக பாக்கியா கூடவே இருந்தார். ஆனால், தற்போது கோபிக்கு ராதிகாவுடன் தொடர்பு இருக்கிற விஷயம் அனைத்தும் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டது. இதற்கு பிறகும் கோபியுடன் சேர்ந்து வாழ்வதில் எந்த பயனும் இல்லை என கோபி இத்தனை நாட்கள் ஆசைப்பட்ட விவாகரத்தை கொடுத்துவிட வேண்டும் என பாக்கியா நினைக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதாவது, பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாய் இருக்கிறார். பாக்கியா பேசுவதை பார்த்து கோபிக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பாக்கியா கோபியை பழிவாங்கிவதாய் நினைக்கிறார். ஆனாலும், குடும்பத்தினர்கள் அனைவரும் கோபியிடம் விவாகரத்து கொடுக்க வேண்டாம் என கெஞ்சுகின்றனர். அதாவது, பாக்கியா தான் நீ செய்த காரியத்தால் மிகவும் மனமுடைந்து இருக்கிறார். அதனால் நீ தான் பொறுமையாக இருக்க வேண்டும், உனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள் என குடும்பத்தினர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 7) மாபெரும் தடுப்பூசி முகாம் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஆனாலும், கோபி குடும்பத்தினர்கள் கூறியதை கேட்பதாக இல்லை. அதாவது, பாக்கியா விவாகரத்து வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், கண்டிப்பாக விவாகரத்து கொடுத்தே தீருவேன் என கூறிவிட்டு கோபியும் கிளம்புகிறார். பின்னர், நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்டபோது விவாகரத்து கண்டிப்பாக வேண்டும் என பாக்கியா அழுத்தமாக கூறிவிடுகிறார். இதனால், இத்தனை சொல்லியும் கோபி பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுத்ததால் செழியன் கோபியை வீட்டை விட்டு வெளியேற சொல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.