தமிழக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னையில் உள்ள பிரபலமான 3 கடற்கரைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. கடல் வளங்களை காக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை:
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு சார்பில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசும் அதனை பின்பற்றி தடையை அமல்படுத்தியது. இதனை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் (EPA) பிரிவு 15 ன் படி அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்த தடையை திறம்பட அமல்படுத்துவதற்காக, தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் – எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு கட்டணம்? முழு விவரம்!
தமிழக அரசும் இந்த தடை விவகாரத்தில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் தற்போது முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 27.07.2022 முதல் 02.08.2022 வரை மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 1881 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,17,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கடற்கரைகளின் தூய்மையை பராமரிக்கவும், கடல்வாழ் வளங்களின் நலனை உறுதி செய்யும் நோக்கிலும் அரசு சார்பில் இவ்வித தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.