தமிழகத்தில் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் – எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு கட்டணம்? முழு விவரம்!
தமிழகத்தில் பெரும்பாலானோர் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பொதுவாக ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் அதிகமான பொருட்கள் மற்றும் சரக்கு உள்ளிட்டவை எடுத்து செல்ல ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது பேருந்துகளிலும் இந்த வசதிகளை அரசு கொண்டு வந்துள்ளது.
பார்சல் சர்வீஸ்
தமிழகத்தில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் நீண்ட தூர பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் இதில் பயணிகள் நீண்ட தூர பயணத்தின் போது அதிக பொருட்களையோ, சரக்கையோ எடுத்து செல்ல ரயில்களில் பயணிக்கின்றனர். ஏனெனில் பேருந்துகளில் அதிகமான அளவிற்கு பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ரயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை மாற்றும் விதமாக தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!
அதாவது தமிழக அரசுப் பேருந்துகளில், இனி வரும் காலங்களில் ரயில்களில் பார்சல் சர்வீஸ் வழங்கப்படுவது போல தமிழக பேருந்துகளிலும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பார்சல் சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் தங்களின் பார்சல்களை தினசரி மற்றும் மாத வாடகை கட்டணம் செலுத்துவதன் மூலமாக செலுத்தலாம். அத்துடன் இத்திட்டத்துக்காக பேருந்தில் 3 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி பேருந்தின் இருபக்கமும் 2 சரக்கு பெட்டிகள், பேருந்திற்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, மூன்று பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து திருச்சி – சென்னை, ஓசூர்- சென்னைக்கு ஆகிய ஊர்களுக்கு ரூ.210 பார்சல் கட்டணம் செலுத்த வேண்டும். இது 80 கிலோ வரை உள்ள பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். இதே போல அரசுப் பேருந்துகளில் மதுரை- சென்னை பேருந்தில் பார்சல் சர்விஸ் மேற்கொள்ள ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். இதையடுத்து கோவை-சென்னைக்கு பேருந்தில் பார்சல் சர்விஸிற்கு ரூ.330 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.