ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர்? மாநில அரசின் சூப்பர் திட்டம்!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்குவது குறித்து மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த முழு விபரங்கள் தற்போது வெளியாகி பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ரேஷன் – சிலிண்டர்:
நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய, அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்களை உத்தரகண்ட் அரசாங்கம் வழங்க திட்டமிட்டு உள்ளது. குறைந்த நடுத்தர மக்களும், ஏழை, எளியோர்களும் பயன்பெறும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பணவீக்க வளர்ச்சி விகிதம் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் கவனத்திற்கு – அடுத்து என்ன செய்ய வேண்டும்?
இருப்பினும் உத்தரகாண்ட் அரசு அந்த்யோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியும். இதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. மேலும் அரசு விதித்துள்ள காலக்கெடுவிற்குள் இதற்கான பணிகளை செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் திட்டத்தின் பலனை பெற இயலாது. இந்த திட்டமானது உத்தரகாண்ட் மாநிலத்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே பயன்படும். இதற்காக அம்மாநில அரசு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மாவட்டம் தோறும் அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்களின் முதல் பட்டியலை சேகரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்க்ள உங்கள் அந்த்யோதயா ரேஷன் கார்டை உடனடியாக எரிவாயு ஏஜென்சியுடன் இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.