தமிழக ரேஷன் கடைகளில் மாற்றத்தை கொண்டு வரும் கூட்டுறவுத்துறை – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கும் பொருட்கள் தரமற்றதாக உள்ளதை குறித்து புகார் எழுந்துள்ள நிலையில் அதை குறித்து ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ரேஷன் கடை அட்டைதாரர்கள் :
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது மாதந்தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக தமிழக அரசு இலவசமாக அரிசி வழங்கி வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், துவரம் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகளை மலிவான விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் அதிக அளவு பயன் பெற்று வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் நியாய விலை கடையில் பண்டிகைக் காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரணப் பொருட்கள் என அனைத்தும் ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடத்தில் கூட கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொடுக்கப்பட்டது.
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்
இந்த சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை சீர்படுத்தும் நோக்கத்தில் கூட்டுறவுத்துறை ஆனது வரும் காலங்களில் நியாய விலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விற்பனை செய்யக்கூடாது எனவும், அப்படி ஒருவேளை வாங்கும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் திரும்பி அனுப்பவும் உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், நியாய விலைக்கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக வைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை நியாய விலை கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.