TNPSC குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு? வெளியான தகவல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
TNPSC குரூப் 4 கட் ஆப்:
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7689 தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடத்தப்பட்டது. சுமார் 18 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சென்ற ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டு தேர்வுக்கான வினாக்கள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். மேலும் தேர்வு எழுதிய பலர் தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என தேர்வர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 160 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 148க்கு மேலும், SCA பிரிவினருக்கு 145க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு? RBI முக்கிய அறிவிப்பு
இதில் இந்த ஆண்டு 5 மதிப்பெண்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்ற அடிப்படையில் இந்த கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.