கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு? RBI முக்கிய அறிவிப்பு!
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
வட்டி விகிதம்:
நாட்டில் பணவீக்கத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முடிவெடுத்துள்ளது. அதாவது, கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரைக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் அறிவித்துள்ளனர். அதாவது, நாட்டில் கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்ய போரின் காரணமாக இந்த ஆண்டின் துவக்கத்தில் 6 சதவீதத்திற்கும் மேலாக இருந்து வருகிறது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8% ஆக இருந்தது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் பணவீக்கத்தின் அளவு 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், நாட்டில் நிலவும் பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரைக்கும் கட்டுப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஏற்கனவே, பணவீக்கத்தின் காரணமாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்தது. தற்போது கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதமாக இருக்கிறது. இந்நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் நடைபெற இருக்கிறது.
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முதலீட்டு வரம்பு குறித்த அறிவிப்பு
மேலும், இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரைக்கும் கூட அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் அறிவித்துள்ளனர். மேலும், கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் வரை கூட உயரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.