தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் அந்த மனு விசாரணையில் நீதிமன்றம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறது.
பிளாஸ்டிக் தடை:
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க அரசு சார்பில் மீண்டும் மஞ்சள் பை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதை குறைக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் பி.டி.ஆஷா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Exams Daily Mobile App Download
அப்போது நீதிபதிகள் கூறுகையில், தமிழகத்தில் மது பாட்டில்கள் திரும்ப வாங்கி கொள்வது போல பிளாஸ்டிக் பைகளை திரும்ப பெறலாம். அதனால் பிளாஸ்டிக் பொருள்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரமால் தடுக்க முடியும். அது மட்டுமில்லாமல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம். மேலும் மாநிலத்தில் மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்தி வருவது போல் மாற்று பொருள்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Common Wealth 2022: ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – ஆர்வத்தில் ரசிகர்கள்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு பிளாஸ்டிக் பொருள்களால் வரும் ஆபத்துக்களை உணர்வதால் அதனை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் அமலில் உள்ளதே தவிர கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் ஏதும் இல்லை என தெரிவித்த நீதிபதி பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா அல்லது உற்பத்தியை அனுமதித்து புழக்கத்தில் விட்ட பின் மேலாண்மை மட்டும் செய்யும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதற்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 12க்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.