Common Wealth 2022: ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – ஆர்வத்தில் ரசிகர்கள்!
பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று இங்கிலாந்தில் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக பெண்கள் கிரிக்கெட் விளையாட உள்ளனர். இதில் இந்தியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காமன்வெல்த்:
காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் தனை சார்ந்த பிராந்தியங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2022 ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டியை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தாண்டு போட்டியில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இன்று நடைபெற்ற போட்டிக்கான தொடக்கவிழாவில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய சார்பாக பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியினை ஏந்தி தலைமை தாங்கினர். மேலும் இந்தியாவிலிருந்து 215 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காமன்வெல்த் போட்டிகளில் முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இன்று மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை எச்சரிக்கை
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, இந்திய மகளிர் அணி எதிர்கொள்ள உள்ளது. அடுத்தாக பேட்மிண்டன் கலப்பு அணி பிரிவில் இரவு 11 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோத உள்ளது. மேலும் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஹர்மீத் தேசாய் சனில் ஷெட்டி, ஷரத் அச்சந்தா, சத்யன் ஞானசேகரன், மகளிர் பிரிவில் தியா சித்தலே, மனிகா பத்ரா, ரீத் டென்னிசன், ஸ்ரீ அகுலா பங்கேற்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ள மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா- கானா அணிகள் மோதுகின்றன.