ரேஷன் கடை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை எச்சரிக்கை!
ரேஷன் கடை ஊழியர்களை சில வழிமுறைகளை பின்பற்றும்படி கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் செயல்பட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே கிட்டதட்ட 35,323 ரேஷன் கடைகள் இருக்கிறது. இவற்றில், பெரும்பான்மையான ரேஷன் கடைகள் சுத்தமாக இல்லை என அவ்வப்போது பொதுமக்கள் குற்றசாட்டு வைத்து வருகின்றனர். மேலும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவ்வப்போது அரசு பலவிதமான சலுகைகளையும் வழங்கி வருகின்றது.
Exams Daily Mobile App Download
மேலும், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை முதலான பொருட்களை விநியோகம் செய்யும் போது கடைகளிலேயே பாதியை சிந்தி சிதறிவிடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ரேஷன் கடைகள் உள்ளேயும், வெளியேவும் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்கிறது என்பதை ரேஷன் கடை ஊழியர்கள் முதலில் உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செஸ் போட்டியை தொடர்ந்து ஆசிய கடற்கரை விளையாட்டு? பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
இதுமட்டுமல்லாமல் அரிசி, கோதுமை முதலான பொருட்களை விநியோகம் செய்யும் போது சிந்தாமல் சிதறாமல் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படி சிந்திய பொருட்களை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இதனால், தரையில் சிந்திய ரேஷன் கடை பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகம் செய்யவில்லை என்பதனையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.