தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்காக மாரத்தான் போட்டி – ஜூலை 31ல் துவக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதனால் பல மாணவர்கள் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த மாணவர்களின் கல்விக்காக உதவித்தொகை திரட்ட வருகிற 31 ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது
மாரத்தான் போட்டி:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கால கட்டத்தில் பல்வேறு உயிர் சேதாரங்கள் ஏற்பட்டது. பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். பெற்றோர்களை இழந்த பள்ளி மாணவ மாணவிகள் தங்களது படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் படிப்பிற்காக நிதி திரட்டும் வகையில் சோ அவேர், பிரெண்ட்ஸ் சேரிட்டபின் டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், ஓடு கல்விக்கு கை கொடு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த போட்டியானது கோவைப் புதூர் மைதானத்தில் வருகிற ஜூலை 31 தேதி காலை 6 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். மாரத்தான் போட்டி மைதானத்தில் தொடங்கி ஆயுதப்படை குடியிருப்பு தனியார் கல்லூரி வழியாக சென்று மீண்டும் மைதானத்தை வந்தடைகிறது. இந்த போட்டி 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கி.மீ என 3 வகையாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 20,409 பேர் பாதிப்பு
இதில் ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்படும். ஓட முடியாதவர்கள் நடை போட்டியாக கலந்து கொள்ளலாம். இந்த மாரத்தான் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இறந்த மாணவ மாணவிகளின் கல்லூரி படிப்பிற்கு வழங்கப்படும். மேலும் இந்த நிதி குறித்த முழு விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.