இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 20,409 பேர் பாதிப்பு!
உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 20,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து அனைத்து பொதுமக்களையும் அச்சுறுத்தியது. இந்நிலையில் பொது இடங்களில் தடை உத்தரவு, சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டது. மேலும் தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில் பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதால் சென்ற ஆண்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காததால் மீண்டும் தற்போது கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து தடுப்பூசி செலுத்துவதனை தீவிரப்படுத்தியது.
Exams Daily Mobile App Download
மேலும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதம் என்பதை புரிந்து கொண்ட பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு 4 கோடியை தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு – புதிய உத்தரவு
இந்தியாவில் இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,39,79,730ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,258ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 22,697 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,33,09,484 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 98.48 % உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.20 % ஆக குறைத்துள்ளது. இதுவரை 1,43,988 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 2,03,60,46,307 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 38,63,96 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.