சீருடையுடன் பொது இடங்களுக்கு செல்ல மாணவர்களுக்கு தடை – அதிரடி உத்தரவு!
கொரோனா வருகைக்கு பின் கடந்த சில மாதங்களாகத்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய விதிமுறை ஒன்றை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
முக்கிய உத்தரவு:
கடந்த சில நாட்களாக பள்ளிகளில் மாணவர்கள் கட்டுப்பாடின்றி அட்ராசிட்டியில் ஈடுபட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் சமூகப் பாதுகாப்பு துறை பள்ளி மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் மாணவ மாணவியர் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும், மாணவ மாணவியர் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டும். மேலும் மாணவ மாணவியர் தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும், பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும், பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவ மாணவியர்கள் இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை, எந்தவொரு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணியக் கூடாது என்றும், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க கதைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும், மாதந் தோறும் ஒரு தலைப்பின் கீழ் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மின்தடை அறிவிப்பு – மின்சார வாரியம் தகவல்
இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய விதிமுறையை, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. அதாவது மால்கள், உணவகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பள்ளி சீருடையுடன் மாணவர்கள் செல்ல அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. பள்ளி வகுப்புகளை கட் அடித்து விட்டு தியேட்டர்கள், மால்கள், ஹோட்டல்களுக்கு செல்வதை தற்போது வழக்கமாக சில மாணவர்கள் வைத்துள்ளனர்கள். இப்படி செய்வதால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. இதை தடுக்கும் விதமாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆணையம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடு 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொருந்தும்.