தமிழகத்தில் நாளை மின்தடை அறிவிப்பு – மின்சார வாரியம் தகவல்!

0
தமிழகத்தில் நாளை மின்தடை அறிவிப்பு - மின்சார வாரியம் தகவல்!
தமிழகத்தில் நாளை மின்தடை அறிவிப்பு - மின்சார வாரியம் தகவல்!

தமிழகத்தில் நாளை மின்தடை அறிவிப்பு – மின்சார வாரியம் தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என் இந்த பதிவில் காணலாம்.

மின்தடை:

நாட்டில் உள்ள அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானதாக மின்சாரம் விளங்குகிறது. மேலும் மின்வாரியங்கள் மூலம் நாட்டிற்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. அதற்கேற்றவாறு அரசானது மக்களுக்கு தரமான மின் சேவையை வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மின் தேவைகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மின்சார வாரியம் பல எளிய சேவைகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் மக்கள் தடையின்றி மின்சாரம் பெறுவதற்கு ஏதுவாக உள்ளது. மக்களின் மின் தேவைகளை அறிந்து அரசானது அதற்கேற்றவாறு மின் சேவையை வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய அரசின் மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு மாநிலங்கள் மூலம் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் துணை மின் நிலையங்களின் மூலம் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், நகரங்கள், போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையங்களை சரியான முறையில் பராமரித்து வருவதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சாரத்துறை மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” – கனமழை எதிரொலி

இத்தகைய பராமரிப்பு பெண்கள் மேற்கொள்ளும் போது பணியில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதிக்கு உட்பட்ட குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள கீரனூர் பேரூராட்சி பகுதிகளான பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த்நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர், என்.சி.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் ஜூலை 30ம் தேதியான நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!