தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வருகிற 1 ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஆரஞ்சு அலர்ட்:
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் பல மாவட்டங்களில் 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றும் (ஜூலை 29) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், கரூர், நாமக்கல், வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அது மட்டுமல்லாமல் நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி பெரம்பலுார், அரியலுார், கடலுார், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் சுங்க கட்டணத்தில் சலுகை – ஒன்றிய அரசு அறிவிப்பு
அதனால் அந்த 5 மாவட்டங்களுக்கு வருகிற 1 ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த ஐந்து மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் சித்தம்பட்டியில், 10 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.