தேசிய நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் சுங்க கட்டணத்தில் சலுகை – ஒன்றிய அரசு அறிவிப்பு!

0
தேசிய நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் சுங்க கட்டணத்தில் சலுகை - ஒன்றிய அரசு அறிவிப்பு!
தேசிய நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் சுங்க கட்டணத்தில் சலுகை - ஒன்றிய அரசு அறிவிப்பு!
தேசிய நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் சுங்க கட்டணத்தில் சலுகை – ஒன்றிய அரசு அறிவிப்பு!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் சலுகை அளிக்க உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சலுகை வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்க வரி கட்டணம்:

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அந்நாட்டு அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் அரசு விதிக்கும் வரிகளையும் தவறாமல் செலுத்துவதும் அடிப்படை கடமையாகும். இந்தியாவில் ஒன்றிய அரசாங்கம் வருமான வரி, ஜி.எஸ்.டி, தொழில் வரி என அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு வரிகளை விதிக்கிறது. மேலும் இந்த வரிகளை மக்கள் செலுத்த தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இன்றைய உலகில் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களும் அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வாகனங்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி சுங்க கட்டண வரியாகும். இதன் காரணமாக வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவதே சிரமமாக உள்ள நிலையில் இந்த சுங்கக்கட்டணம் நடுத்தர மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தற்போது சுங்க கட்டணத்தில் புதிய சலுகையினை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA)உயர்வு? விரைவில் வெளியாகும் அறிவிப்பு

அதாவது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிமுறைகள் 2009 ன் படி தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகம் இல்லா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு சுங்க சாவடிகளில் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து 1 மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்துபவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் இக்கட்டணம் ரூ.315 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது சுங்கச்சாவடிகளில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் வர்த்தகம் இல்லா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளருக்கு இந்த சலுகை அளிக்கப்படுவதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!