தமிழக பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக திட்டம் – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டியில் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் சதுரங்க விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் தமிழகத்தில் இருந்து பங்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு போட்டி:
தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வழக்கம் போல தினசரி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் கற்றல் இடைவெளியை சரி செய்யும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கல்வியை தாண்டி விளையாட்டு துறைகளிலும் தமிழக பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கோடு சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியானது ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த போட்டி பள்ளி அளவில் நடத்தப்படும் அதில் வெற்றி பெறுவோர், வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பின் அதன் வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெல்பவர்கள் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று விளையாட தேர்வு செய்யப்படுவார்கள். அதிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைக் நேரில் காணவும் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் – அரசு அதிரடி நடவடிக்கை!
இந்த பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 13ம் தேதியான இன்று தொடங்கியது. இப்போட்டிகள் 1-5 வகுப்புகள், 6-8 வகுப்புகள், 9-10 வகுப்புகள், 11-12 வகுப்புகள் என நான்கு பிரிவுகளாக நடைபெற உள்ளது. ஒரு மாவட்டத்திற்கு 8 மாணவர்கள் என்கிற அளவில் 38 மாவட்டங்களையும் சேர்த்து 152 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், செயற்பாட்டுத் திறன், ஆளுமைத் திறன் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் இத்தகைய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.