பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் – அரசு அதிரடி நடவடிக்கை!

0
பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் - அரசு அதிரடி நடவடிக்கை!
பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் - அரசு அதிரடி நடவடிக்கை!
பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் – அரசு அதிரடி நடவடிக்கை!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் கட்டாய ஆண்மை நீக்கம் செய்வதற்கு தாய்லாந்து நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் குற்றங்கள் குறையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றங்கள்

தற்போது கையடக்க கைபேசிக்குள் உலகத்தை அடக்கி வைத்திருக்கும் இன்றைய இணைய சமுதாயம் ஏகப்பட்ட விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நூற்றாண்டு அளவில் நடைபெற்ற மாற்றங்கள் பலவும் இப்போது மொபைல் போன் மற்றும் இணைய பயன்பாடுகளால் வெறும் 10 ஆண்டுகளுக்குள் நடைபெற்று வருகிறது. அதே அளவுக்கு இந்த இணைய சமூகத்தில் நடைபெறும் குற்றங்களும் வெகுவாக பெருகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் வல்லரசு நாடுகள் துவங்கி வளர்ந்து வரும் நாடுகளும் சந்திக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை பாலியல் வன்கொடுமைகள் தான்.

Exams Daily Mobile App Download

அதாவது, உலகளவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உலகளவில் 6 பெண்களில் ஒருவர் மற்றும் 33 ஆண்களில் ஒருவர் என வாழ்நாள் முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அறிக்கைகள் கூறுகிறது. இதில் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா முதல் ஐரோப்பா வரைக்கும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக பல நாட்டு அரசாங்கங்கள் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா – இலவச தரிசன டிக்கெட் குறித்து ஆலோசனை!

இருந்தாலும் இந்த குற்றங்கள் இன்றளவும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்த பரிந்துரைக்கு அமைச்சரவில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி தாய்லாந்து நாட்டில் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ரஷ்யா, தென் கொரியா, போலந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!