தமிழகத்தில் நாளை (ஜூலை 14) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு!
சிவகாசி கோட்டத்தில் உள்ள அப்பையநாயக்கன்பட்டி, நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜூலை 14ம் தேதி (வியாழக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை
பொதுவாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மின் நிலையங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டு இருக்கிறதா என்பதை மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் பராமரிப்பு பணிகளை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட ஒரு சில மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், மின் பாரம்பரிப்பின் போது சாய்ந்த மின் கம்பங்களை நிமிர்த்துதல், வயர்களில் உரசும் மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் பழுதடைந்த வயர்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மின் பராமரிப்பு ஊழியர்கள் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – நாளை முதல் விடைத்தாள் பதிவிறக்கம்!
அந்த வகையில், தற்போது சிவகாசி கோட்டத்திற்கு உட்பட்ட அப்பையநாயக்கன்பட்டி,நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான புதுப்பட்டி, நல்லன் செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி, சிந்துவம்பட்டி, எம்.நாகலாபுரம்,சிறு குளம், வீரர் பட்டி, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை ஜூலை 14ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.