தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – நாளை முதல் விடைத்தாள் பதிவிறக்கம்!
தமிழகத்தில் கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை (ஜூலை 14) முதல் தங்களது விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் நகல்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் தாமதமாக துவங்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதத்தில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 20ம் தேதியன்று 12 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய மாணவர்களில் 93.7% பேர் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களுக்கு இப்போது கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை (ஜூலை 14) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது, தேர்வு முடிவுக்கு பிறகு மாணவர்கள் பலர் விடைத்தாள் நகல் கோரி அரசுத் தேர்வு துறையின் இணையதளத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இன்று (ஜூலை 13) பள்ளிகள் & கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!
அதன்படி, விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்வது, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்வதற்காக அரசுத் தேர்வு துறையின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் அதனை http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், மறுகூட்டலுக்கு ஜூலை 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.