பாக்கியாவை மீறி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி – புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!
கோபிக்கும் ராதிகாவுக்கு தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்நிலையில், கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவை திருமணம் செய்து கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி இதற்கு மேல் பொய் சொல்லவே முடியாத அளவுக்கு மாட்டிவிட்டார். இத்தனை நாட்களாக மறைத்து வைத்த அத்தனை உண்மையும் மொத்த குடும்பத்தின் முன்னிலையில் அம்பலமாகிவிட்டது. சில நாட்களாகவே பாக்கியாவிற்குமே கோபி மீது சந்தேகம் இருந்தது. ஆனால், கோபி இந்த அளவுக்கு ஏமாற்றுவார் என பாக்கியா கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அதாவது, ராதிகாவை தான் கோபி காதலிக்கிறார் என்கிற உண்மை தெரிய வந்ததுமே பாக்கியா சுக்கு நூறாக நொறுங்கி போய்விடுகிறார்.
Exams Daily Mobile App Download
கோபியும், ராதிகாவும் கையை பிடித்துக்கொண்டு பேசி கொண்டிருப்பதை பார்த்த பிறகு தான் பாக்கியாவிற்கு அனைத்துமே புரிய வருகிறது. அதாவது, எதற்காக கோபி தன்னை பிடிக்கவில்லை என்று அடிக்கடி கூறினார், ராதிகாவை பார்க்க ஏன் மறுத்தார் என்கிற அனைத்து கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துவிட்டது. இதன் பின்பு, கோபி குணமாகி வீட்டிற்கு வந்ததுமே கோபியிடம் பாக்கியா மருத்துவமனையில் நடந்த விஷயத்தை பற்றி கேட்கிறார். மேலும், பாக்கியா சொன்ன அனைத்தையும் கேட்டு ஈஸ்வரியால் நம்பவே முடியவில்லை. ஒருபோதும் கோபிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்காது என ஈஸ்வரி கூறுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகை வினுஷா தேவி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பின்பு, எழிலும் ஈஸ்வரியிடம் நீங்கள் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை. அப்பாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என கூறுகிறார். பின்பு, கோபியை பற்றிய உண்மைகள் வெளியே வந்ததும் குடும்பமே உடைந்துபோகிறது. இதன் பின்பு கோபியை குடும்பமே வெறுத்து ஒதுக்குகிறார்கள். மேலும், உங்களுக்கு ராதிகா தானே முக்கியம் என பாக்கியாவும் கோபியை வெறுக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.