‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் நடிகை வினுஷா தேவி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சன் டிவி சீரியல் சுந்தரி கேப்ரில்லா, விஜய் டிவி சீரியல் பாரதி கண்ணம்மா வினுஷா இருவருமே சின்ன திரையில் நாயகிகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இருவரும் வெள்ளித்திரையில் களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வைரலாகும் தகவல்:
சன் டிவியில் தினமும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பழைய சீரியல்களை போன்றே புதிய சீரியல்களுக்கும் அதிக வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இவற்றில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் அதிக பேரின் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் டாப் 5ல் இடம் பெற்றுள்ளது. அதே போன்று இந்த சீரியல் தொடர்ந்து மக்கள் மனதை கவர்ந்த ஒரு சூப்பர் ஹிட் சீரியலாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக சுந்தரி தொடரின் முக்கிய கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கேப்ரியெல்லா செல்லஸ் நடிப்புக்காக பலரும் இந்த தொடரை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் கேப்ரியலா. மேலும் ஐரா படத்தில் சிறு வயது நயன்தாராவாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இவரைப் போலவே விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வினுஷா. அதாவது விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று, பாரதி கண்ணம்மா சீரியல், அதில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சில மாதங்களுக்கு முன்பு விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக தற்போது நடித்து வருகிறார். இந்தத் தொடர் மூலம் இவருக்கு ஏராளமான புகழ் கிடைத்து உள்ளது.
சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!
இந்நிலையில் சுந்தரி தொடரில் நடித்து வரும் கேப்ரியலாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் வினுஷாவும் திரைப்படம் ஒன்றில் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருமே டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள். இந்நிலையில் இருவரும் இணைந்து என்4 என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதை வினுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இருவரும் சின்னத்திரை தொடர்களிலிருந்து விலகுகிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.