மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலையில் அறிவிப்பு!
தற்போது 7வது சம்பள கமிஷனின்படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஜூலையில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
தற்போது அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத இறுதியில் எதிர்பார்த்ததை விட அதிகமான DA உயர்வு கிடைக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது, சமீபத்திய அகில இந்திய CPI-IW தரவு மே மாதத்திற்கான அகவிலைப்படியை நிர்ணயிப்பதில் முக்கியமான காரணியாக அமைந்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது, சமீபத்திய ஊடக அறிக்கைகளின் படி, ஜூலை மாதத்தில் அகவிலைப்படி தொகை ஆறு சதவீதம் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் மொத்த DA தொகை 40 சதவீதத்தை எட்டக்கூடும். இவை வெறும் ஊகங்கள் மட்டுமே. ஏனென்றால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!
அதன்படி, ஜூலை தவணைக்கான அகவிலைப்படியை நிர்ணயிக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW புள்ளிகள் 127.7 ஆக இருந்தது. இதை தொடர்ந்து மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த DA 6 சதவீதமாக இருக்கும் என்று பல ஊடக இணையதளங்கள் கூறுகின்றன. இது குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்பட்டால் 1.16 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.