அனைத்து பள்ளி & கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி!
கர்நாடகா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் நேற்று (ஜூலை 7) முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் இன்று (ஜூலை 8) மற்றும் நாளை (ஜூலை 9) என 2 நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அம்மாநிலத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட 2 நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குழந்தைகள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தாழ்வான பகுதிகள் மற்றும் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் அவசரப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தாலுகாவிலும் அவசர சிகிச்சை மையங்களை திறக்க மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
TN ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!
மேலும் இன்று (ஜூலை 8) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் உத்தர கன்னடத்தின் கார்வாரில் உள்ள சென்டியே கிராமத்தில் மட்டும் அதிகபட்சமாக 260 மிமீ மழை பெய்துள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மல்நாடு பகுதி முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமானது வரை கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.