TN ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முதல் தாள் எந்தெந்த தேதிகளில் நடைபெற இருக்கிறது என்பது குறித்தும், தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்த முழு அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் தான் நிரப்பப்படுகின்றனர். அதாவது, 1874 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது. இதுவரைக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல நாட்கள் ஆகியும் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அட்டவணைகள் மற்றும் ஹால் டிக்கெட் அனைத்தும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இருந்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் பயிற்சி வகுப்புகள்!
மேலும், இந்த தேர்வு கணினி வழியாக நடைபெறும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1874 பட்டதாரி ஆசிரியர்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கன தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.