தமிழக கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், அமைச்சர் பொன்முடி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கால அவகாசம்:
கடந்த ஜூன் 20ம் தேதி அன்று, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன படிக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளைப் போலவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் அரசு மற்றும் சில தனியார் கல்லூரி மாணவர்களிடையே போட்டி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், B.A, B.Sc, B.Com, BBA, BCA உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான (2022-2023) விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 22 -ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் http://www.tngasa.in அல்லது http://www.tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் நாளை மஞ்சள் அலர்ட் – முதலமைச்சர் அறிவிப்பு!
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஜூலை 5- ஆம் தேதி வரை 3 லட்சத்து 43,586 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 82,430 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனா். மேலும் 2 லட்சத்து 50,181 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றுடன் முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு முடிந்த நிலையில், அமைச்சர் பொன்முடி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவது பற்றி இன்று அறிவிப்பு வெளியடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.