அக்னிபாத் திட்டம்: பெண்களுக்கு முதல் தொகுப்பில் முக்கியத்துவம் – இந்திய கடற்படை அறிவிப்பு!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஜூலை 2 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் கடற்படையில் சேர விரும்பும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
அக்னிபாத் திட்டம்:
அக்னிபாத் என்ற புதிய திட்டம் கடந்த 14ம் தேதி மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்’ என்று அழைக்கப்படுவார்கள். ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இதற்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த அக்னி வீரர்கள் ராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிவார்கள். இந்த அக்னி வீரர்களில் அதிகபட்சமாக 25% மட்டுமே நிரந்தரமாக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜூலை 7ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்தத் திட்டத்தைக் கண்டித்து 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. அந்த வகையில் உத்தரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா மாநிலங்களில் ரயிலுக்கு தீ வைக்கும் நிகழ்வுகளும் ஏற்பட்டன. மறுபுறம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பணியில் சேர விண்ணப்பங்களும் குவிந்து வருகின்றன. அதன்படி இந்திய விமானப்படையில் பணிக்கு சேர இதுவரை இரண்டே முக்கால் லட்சம் பேர் நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஜூலை 2 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வாகும் பெண்கள் பல இடங்களில் கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.