தமிழகத்தில் ஜூலை 7ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஜூலை 7ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் குறித்த விவரத்தினை இந்த பதிவில் காணலாம்.
மின்தடை:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க, மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் தெருக்களில் வளர்ந்துள்ள உயரமான மரங்கள் மின் பாதைகளுக்கு இடையூறாக அமையும். அதனால் அவைகளும் இந்த பணிகளின் போது அகற்றப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் அனைவரது பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு பாடவேளைகள் குறைப்பு? பள்ளி கல்வித்துறை உத்தரவு!
இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறார். இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி துணை மின் நிலையத்தில் ஜூலை 7ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காரையாறு, சேர்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுக பட்டி, கோட்டை விலைப்பட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து ஜூலை 7ம் தேதி கரிவலம்வந்தநல்லூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.