6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு – பருவமழை எதிரொலி!
கேரளாவில் தற்போது தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வரும் ஜூலை 7ம் தேதி வரை கிட்டத்தட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடிய அச்சம் உருவாகியுள்ளது.
பருவமழை தீவிரம்
சமீபத்திய நாட்களில் உலக அளவில் பெரிய அளவிலான வானிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக சில வானிலை மாற்றங்கள் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகளவு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, பருவமழை துவங்கிய கால கட்டத்தில் சாதாரணமாக காணப்பட்ட மழை பின்பு தீவிரம் அடைய துவங்கி இருக்கிறது. இந்த திடீர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோபி & ராதிகாவுடான உறவை பற்றி அறிந்து கொள்ளும் பாக்கியா – அடுத்து நடக்க போவது என்ன?
இந்த மாவட்டங்களில் 6 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த கனமழையை முன்னிட்டு கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இடங்களில் ஜூலை 7ம் தேதி வரைக்கும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.