கோபி & ராதிகாவுடான உறவை பற்றி அறிந்து கொள்ளும் பாக்கியா – அடுத்து நடக்க போவது என்ன?
நீண்ட நாட்களாக பாக்கியாவிடம் இருந்து கோபி மறைத்த உண்மைகள் அனைத்தும் தற்போது அம்பலமாகிவிட்டது. இதற்கு பிறகு பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என சீரியல் பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பாக்கியலக்ஷ்மி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலக்ஷ்மி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டது. இதற்கு பிறகு பாக்கியா என்ன முடிவு எடுக்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, பாக்கியாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபி மீது சந்தேகம் இருந்தது. ஆனால், கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொள்வார் என்கிற அளவிற்கு கனவில் கூட பாக்கியா யோசித்து பார்க்கவில்லை. ஆனால், தற்போது தான் கோபியை பற்றிய மொத்த உண்மையும் அம்பலமாகியிருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது, கோபிக்கு ஆக்சிடன்ட் ஆகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள போது கோபியின் மனைவி என ராதிகா அங்கு வருகிறார். அப்போது, ராதிகா கோபியிடம் நெருக்கமாக அமர்ந்து பேசுவதை பாக்கியா கவனிக்கிறார். அதாவது, நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்கவே முடியாது என ராதிகாவின் கையை பிடித்து கோபி கெஞ்சுகிறார். அப்போது தான் பாக்கியாவிற்கு அனைத்துமே புரிகிறது. ஒருமுறை குடி போதையில் கோபி பாக்கியாவிடம் உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்காது. பிடிக்காமல் தான் உன்னை திருமணம் செய்தேன் என கூறிய அனைத்தையுமே நினைத்து பார்க்கிறார். இதன் பின்பு ராதிகாவும் பாக்கியாவிடம் கூறியதை நினைத்து பார்க்கிறார்.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று – 19 பேர் பலி! மத்திய சுகாதாரத்துறை தகவல்!
அதாவது, அவரது குடும்பத்தை பற்றி சொன்ன அனைத்துமே பொய் என கூறியிருந்தார். அப்போது ராதிகா கோபியை பற்றி தான் கூறியிருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்நிலையில், கோபியும் ஏமாற்றிவிட்டதை அறிந்து மருத்துவமனையை விட்டே வெளியே கிளம்புகிறார். இதற்கு பிறகு பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை. அதாவது, கோபியை ராதிகாவுக்கு விட்டுக்கொடுக்க போகிறாரா அல்லது இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பாக்கியா ஏதேனும் தற்கொலைக்கு முயற்சி செய்வாரா அல்லது தனி ஆளாக இருந்து தைரியமாக குடும்பத்தை சமாளிக்க போகிறாரா என்பதை இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.