TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் TNPSC குரூப் 2 மற்றும் 2A போட்டித்தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டிருந்த நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூலை மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர் மற்றும் குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A போட்டித்தேர்வுகளை கடந்த மே மாதம் 21ம் தேதியன்று நடத்தி இருந்தது. அந்த வகையில் மொத்தம் 5,529 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள 8 லட்சம் விண்ணப்பதாரர்கள் எழுதி இருந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த முதல்நிலை தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் சுமார் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் மே 21ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கிய குரூப் 2 தேர்வு பிற்பகல் 12.30 மணிவரை மொத்தம் 3 மணி நேரத்திற்கு நடத்தப்பட்டது. இந்த நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்தபடி கடந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஜூலை 11 வரை விடுமுறை!
இதை தொடர்ந்து ஜூலை மாதம் TNPSC குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையத்தின் உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மாத இறுதிக்குள் குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் ஜூலை 24ம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.