தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி, அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
வலுக்கும் கோரிக்கை:
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. இந்த வகையில் தமிழக அரசு ஊழியர்களும் , பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தான். தமிழக அரசின் தற்போதைய இன்றியமையாத கடமை என்று பலதரப்பிலுருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்? முழு விவரம்!
மேலும் தமிழகத்தில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இருப்பினும் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகி உள்ள நிலையில், இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது
Exams Daily Mobile App Download
அதாவது, கோயம்புத்தூர் பொள்ளாச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு ஆகிய முப்பெரும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. அந்த விழாவில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.