SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி விடுமுறை நாட்களிலும் வங்கிச் சேவைகள்!
எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இனி எந்தவொரு இடத்தில் இருந்தும், எந்தவொரு நேரத்திலும் வங்கிச் சேவைகளை பெற முடியும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிச் சேவைகளையும் பெறலாம்.
வங்கிச் சேவைகள்:
பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கின்றன. வங்கி சேவைகள், நிதி சார்ந்த சேவைகள், முதலீடு மட்டுமல்லாமல் அரசு திட்டங்களில் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ க்கு 45 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கியானது சமீபத்தில் இரண்டு டோல் ஃப்ரீ நம்பர்களை அறிமுகம் செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த டோல் ஃப்ரீ எண்களின் முக்கிய நோக்கம், இனி வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையை பெறுவதற்காக வங்கியில் பலமணிநேரம் காத்திருக்க தேவையில்லை என்பது தான். மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அறிமுகம் செய்யப்பட்ட இலவச தொடர்பு எண்கள் “1800 1234 மற்றும் 1800 2100” இவைதான். இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 44 விதமான சேவைகள் வழங்கப்படுகின்றன என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆக. 16ம் தேதி கலந்தாய்வு – 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!
குறிப்பாக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தச் சேவையை பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகள் ஆகியவற்றை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் ஏடிஎம் கார்டு சேவை, கார்டு விடுவிப்பு சேவை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து தங்களுக்கான செக் புக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலை குறித்தும் இதைப் பயன்படுத்திக் தெரிந்து கொள்ளலாம். இ எஸ்பிஐ இணையதள சேவைகள் அல்லது ஆப் சேவைகள் போன்ற டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று கருதப்படுகிறது.