தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆக. 16ம் தேதி கலந்தாய்வு – 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆக. 16ம் தேதி கலந்தாய்வு - 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆக. 16ம் தேதி கலந்தாய்வு - 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆக. 16ம் தேதி கலந்தாய்வு – 1 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பொறியியல் கல்லூரிகளில் 2022 – 2023 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்களை பொறுத்து உரிய படிப்புகளை தேர்வு செய்ய கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மற்ற கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில் முதல் நாளில் மட்டும் சுமார் 18,000க்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனை தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்கும் பணிகள் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி இன்றுடன் 9 நாட்கள் ஆகி விட்டது. இதுவரை சுமார் 1,01,916 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். அதில் 31,319 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும் 59,372 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி வரை அசல் சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Post Office அதிக பணத்தை அள்ளி தரும் RD திட்டம் – மாதம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் ரிட்டன்ஸ்!

அடுத்ததாக ஜூலை 20 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 8ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடங்கும். இந்த கலந்தாய்வில் ஆகஸ்ட் 22ம் தேதி பொதுகல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி மாணவர்கள், ஆகியோர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதே போல துணை கலந்தாய்வு அக்டோபர் மாதம் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. 9 நாட்களிலேயே 1,01,916 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளதை அடுத்து இனி வரும் நாட்களில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!