தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் கொரோனா பரவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதில் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 தாண்டி பதிவாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று வேகமெடுக்க உருமாறிய ஒமைக்ரான் தொற்றின் பிஏ 5 வகை வைரஸ் தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்நது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு பொதுமக்களுக்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
TNEB தமிழக மின்வாரியத்தில் 2400 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ரத்து – முக்கிய கோரிக்கை!
மேலும் மத்திய அரசு தொற்று அதிகம் பரவி வரும் மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.