மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை – 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 மாதங்களுக்கான அகவிலைப்படி தொகை அடுத்த மாதம் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் பெரிய பரிசுத் தொகையை அரசாங்கம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத கால அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை அரசாங்கம் ஜூலை மாதம் வழங்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. இதனுடன், ஊழியர்களின் டிஏ அதிகரிப்பும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது வரை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி பணம் அரசு ஊழியர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் DA நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இப்போது கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்த 18 மாத கால DA நிலுவைத் தொகையை மத்திய அரசாங்கம் விரைவில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரை பணம் கிடைக்கும். இந்த தொகை ஊழியர்களின் சம்பள வரம்புக்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில் நிலுவைத் தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டால், நிலை 1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11880 முதல் ரூ.37000 வரை இருக்கும். அதே சமயம், லெவல் 13 ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கலாம்.
ஜூன் 27ம் தேதி அறிவிக்கப்பட்ட வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜூலை மாதத்தில் 4 முதல் 5 சதவீதம் வரை உயர்த்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. ஆனால், அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களின் டிஏவை உயர்த்துவதன் மூலம் நிவாரணம் வழங்க முடியும் என்று நம்பப்படுகிறது. தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இப்போது அடுத்த தவணை DA அதிகரிப்பால் அவர்களுக்கு 38% முதல் 39% வரை DA கிடைக்க வாய்ப்புள்ளது.