சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஜூன் 20) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை அருகாமையில் உள்ள அரசனூர் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு நிமித்தம் காரணமாக நாளை திங்கட்கிழமை ஜூன் 20ம் தேதி மின் விநியோகம் இருக்காது என சிவகங்கை மாவட்ட மின் செயற்பொறியாளர் து. இரா. இந்திரா தெரிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு
மின்சாரம் என்பது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த மின்சாரத்தை சிறு தொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட இந்த மின்சாரத்தை அதிகம் பாதுகாக்கவும், குறைவாக செலவழிப்பது நம்முடைய கடமை. ஆகையால் தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை செய்யப்பட்டு, மின் சாதனங்களை பழுது அடைந்துள்ளதா அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா மற்றும் மின் துண்டிப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதா என்று மின் சார்ந்த பணியாளர்கள் மாதம் ஒரு முறை கண்காணித்து வருகின்றன.
TNPSC குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடங்கள் – 5 மாவட்டங்களில் தேர்வு!
அந்த வகையில் சிவகங்கை பக்கத்தில் உள்ள அரசனூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான கானூர், பச்சேரி, இலுப்பக்குடி , பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூர், படமாத்தூர், சித்தலூர், கண்ணாரிருப்பு, மைக்கேல்பட்டினம், களத்தூர், ஏனாரி, கல்லூரணி, கோவனூர் ஆகிய பகுதிகளில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் நாளை திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்பட உள்ளதாக மின் கோட்ட செயற்பொறியாளர் து.இரா. இந்திரா தெரிவித்துள்ளார்.