தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் அறிவிப்பு – தாமதம் இதற்காக தான்? காரணம் இதோ!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேதி மாற்றத்திற்கான காரணம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் இந்த ஆண்டு நேரடி முறையில் நடத்தப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 17) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் இம்மாதம் 20ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் கடந்த மே 6ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இம்மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 2 துவங்கி 10ம் தேதி நிறைவடைந்தது.
Exams Daily Mobile App Download
இதை தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்ததால் இன்று (ஜூன் 17) காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 23 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – 2 கட்டங்களாக நடைபெறவிருக்கும் தேர்வு! புதிய அறிவிப்பு!
இந்த தேதியும் இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவிக்க கால தாமதமாகி இருக்கும் வேளையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இந்த 2 வகுப்புகளுக்குமான முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வரும் 20ம் தேதியன்று வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.